God Murugan God Murugan
Home Submit Jokes, SMS etc. Login Signup

Pudhu Tamil Kavithaikal in Tamil

Pudhu Tamil Kavithaikal in Tamil is a collection of a few Tamil Poems (kavithaikal) written in Tamil Language.

பார்வை
எத்தனை முறைதான்
இப்படி ஏமாறுவது?

நீ இல்லாத போதுகூட
எனக்கேன்
உன் வீட்டு ஜன்னல்
நீயாகவே தெரிகிறது?

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

வெற்றி
நிலா
தேய்வதால்
வானம் வருத்தப்படுவதில்லை...

பூக்கள்
உதிர்வதால் செடிகள்
புலம்புவதுமில்லை...

மழையில் நனைவதால்
மரங்கள் குடை
பிடிப்பதுவுமில்லை...

மதங்கள்
வேறுபடுவதால் மனிதம்
மாறுவதுமில்லை...

நம்பிக்கை தொடர்வதால்
தோல்வி வெற்றியின்
வேரறுப்பதுமில்லை..

உழைத்து வாழ்வதால்
வாழ்வில் வறுமை
வீசுவதுவுமில்லை..!

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

வெற்றி
நிலா
தேய்வதால்
வானம் வருத்தப்படுவதில்லை...

பூக்கள்
உதிர்வதால் செடிகள்
புலம்புவதுமில்லை...

மழையில் நனைவதால்
மரங்கள் குடை
பிடிப்பதுவுமில்லை...

மதங்கள்
வேறுபடுவதால் மனிதம்
மாறுவதுமில்லை...

நம்பிக்கை தொடர்வதால்
தோல்வி வெற்றியின்
வேரறுப்பதுமில்லை..

உழைத்து வாழ்வதால்
வாழ்வில் வறுமை
வீசுவதுவுமில்லை..!

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

ஏதேதோ...நினைவு!
எங்கெங்கோ.....
பிறந்தோம்!

எங்கெங்கோ
வளர்ந்தோம்!

ஆயினும் நாம்
ஒன்றாக பயணித்த
சில நினைவுகள்.....!

தினம் தினம்
வந்து போகின்ற
பேருந்து வரலாம்
வராமல் போகலாம்
வழித்தடமும் மாறலாம்
ஆனால்

நான் மட்டுமே.....
வந்து வந்து போன
சில நினைவுகள்.....!
மனம் விட்டு
பேசிய சில வார்த்தைகள்
வாய்விட்டு சிரித்த
சில நேரங்கள்

உதட்டளவு உறவினை
உதறித் தள்ளிவிட்டு
உள்ள்த்தளவில்
உறவினை வளர்த்து
உயிர் வாழ்வோமெனச் சொன்ன
உன் நினைவுகளால்.....!

மறக்க முடியாத
உறவுகளைச் சுமந்து
ஊனமாய் போன உடம்புடன்
நான் மட்டும்
நித்திரை இல்லாத
நினைவுகளோடு.....
இன்னும்


Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

தண்டனை
ஒரு நாள்
உன் அழகை
ரசித்த குற்றத்திற்காக

ஆயுள்கால தண்டனை
தந்து விட்டது
திருமணம்!

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

தவிப்பான வாழ்க்கை
கருவறையில் இருந்தால்
வெளிவர தவிப்பு!

வெளி வந்தால்
கனவோடு தவிப்பு!

தேர்வு வந்தால்
வெற்றியடைய தவிப்பு!

வெற்றியடைந்தால் -
வேலைக்கு தவிப்பு!

வேலை கிடைத்தால்
வாழ்வோடு தவிப்பு!

வாழ்க்கை முடிந்தால்
மரணத்தில் தவிப்பு!

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

தவிப்பான வாழ்க்கை
கருவறையில் இருந்தால்
வெளிவர தவிப்பு!

வெளி வந்தால்
கனவோடு தவிப்பு!

தேர்வு வந்தால்
வெற்றியடைய தவிப்பு!

வெற்றியடைந்தால் -
வேலைக்கு தவிப்பு!

வேலை கிடைத்தால்
வாழ்வோடு தவிப்பு!

வாழ்க்கை முடிந்தால்
மரணத்தில் தவிப்பு!

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

பக்கத்தில் வா...
கண்ணடித்தேன்,
கை பிடிப்பதற்காக!

புன்னகைத்தேன்,
நாணம் காண்பதற்காக!

முத்தமிட்டு
பறக்கவிட்டேன்-அவள்
அச்சம் காண்பதற்காக!

இத்தனையையும்
பயந்து பயந்து
செய்த என்னிடம்,
பயப்படாமல்
ஜாடை காட்டினாய்,
பக்கத்தில் வா என்று!

பெண்ணே காதல்
வந்தாலே
தானாக தைரியமும்
வந்து விடுமோ!

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

பொறுமை
தலை நிமிர்த்திப் பார்க்கவில்லை
நெல் மகள்!

அறுவடை என்ற பெயரில்
அரிவாள் கொண்டு
வெட்டிய போதும்....!

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

அவள் வருவாளா
மனைவியை மறந்து மனசு
மற்றவளை நினைக்க

மனைவி மருந்தருந்த
மாமனார் தலைகுனிய

மகனே என்ற தாயோ
மானங்கெட்டவனே
என்கிறாள்- அண்ணா
என்றவனோ அனாதை
என்கிறான் - தம்பி
என்றவனோ தள்ளி
வைக்கிறான்

இத்தனையையும் தாங்கிக்
கொண்டு தவிக்கிறேன்
தனிமரமாக- இங்கு
தண்ணீர் ஊற்ற
அவள் வருவாளா.

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

லஞ்சம்
லட்சியங்களை
லட்சியம்
செய்யாமல்

லஞ்சம் கொடுத்து
வாங்கிய பதவி
மனைவி.

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

அழகான கவிதை
கடற்கரை மணலில்
உனது பெயரை எழுதி வைத்தேன்...

அலைவந்து எடுத்துச் சென்றது
அழகான கவிதை என்று!!!

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

காதல்
மனதுக்குள் கலவரம்.....
விழிகளின் ஆயுதங்கள்
மாறி,மாறி தாக்க

இதழ்களின் முத்தமோ
கலவரத்தை அடக்கியது!

இப்போது, என் வாலிப நேசத்தில்
அமைதியாய் பறக்கிறது
காதல் கொடி!

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

தொட்டியில் மீன்
ரசிக்கத்தான் வருகிறார்கள்
எல்லோரும்!
விடுவிக்கும் மனம் யாருக்குமில்லை!

நான் நீரில் நீந்துகிறேன்
நீங்கள் அறியாமையில் நீந்துகிறீர்கள்....

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

நினைவுகள்
சிலையைப் பார்ப்பது போல்
ஒருவருக்கொருவர் நாம்
முதன் முதலாய் பார்த்த
அவசர நொடிகள்!

ஒற்றை முதற்பரிசை
பகிர்ந்து கொண்டதும்
இணைந்துவிட்ட நம்
மன அலைகள்!

காதலிக்கிறெனென்று நீயோ நானோ
சொல்லத் தேவையென்னயென்று
சொல்லிச் சிரித்த
கதவோர முதல் முத்தம்!

மெய்ஞானம் முதல் முத்தத்திலென்று
நம்மில் உதயமான ஞானம்!
சிலநேர ஸ்பரிசங்கள் பொங்கியெழ
அதை கட்டுப்படுத்த
நாம் தவித்த தவிப்புகள்!

வெட்கத்தால் வேகமாய் நீ செல்ல
என் நினைவுகளின் இல்லத்திற்கு
ஒடிவந்து கொஞ்சுமுந்தன்
கொலுசு சங்கீத்த்தை
ரசிக்கும் மலரும் நினைவுகள்!

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

காதல் பிரிவு
மலையை விட்டு
பிரியும் அருவி!

கடலை விட்டு
பிரியும் கரை!

வானத்தை விட்டு
பிரியும் மழை!

உடலை விட்டு
பிரியும் உயிர்!

உன்னை விட்டு
பிரியும் நான்!

என்னை விட்டு
பிரியும் நீ!

நம் இருவரையும்
விட்டு பிரிகிறது
நம் உண்மையான காதல்!

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

முரண்பாடு
புத்தரை
வணங்கியபடி
பக்தன்
கேட்டான்,

புத்தர்
துறந்த
அனைத்தையும்...!

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

உறுத்தல்
முள்ளாய் இருந்தேன்
மலராய் ஆக்கினாய்!

தீயாய் இருந்தேன்
தீபமாய் ஆக்கினாய்

கல்லாய் இருந்தேன்
சிலையாய் ஆக்கினாய்.

விலங்காய் இருந்தேன்
மனிதனாய்
ஆக்கினாய்.

ஆனால்...
நீ மட்டும் மாறாமல்
இன்னும் கல்லாய்
இருப்பது ஏன்?

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

கருவறையில்...
உன்னை
என் கருவறையில்
உயிர் தரிக்கிறேன்
என் காதலனாக!

என் கணவனாக
நீ உயிர் பெறுவாய் என்று...!

உன் பிரிவும், செல்லக் கோபமும்,
குழந்தை பிறக்கும் தறுவாயில்
தாய் அனுபவிக்கும் வலியான
சுகங்கள் போல...

எனக்கும் அது
சுகமாகத்தான் இருக்கிறதடா!

நீ கருவிலே சிதைந்து விடாதே...
நான் கதறி அழுதுவிடுவேன்!

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

வேண்டுகிறேன்
குடை பிடித்தபடி
உன்னோடு சேர்ந்து பயணிக்க
மழை வர வேண்டுகிறேன்!

மரத்தடி நிழலில் ஒதுங்கி
உன்னோடு பேசிக் கொண்டிருக்க
வெயிலடிக்க வேண்டுகிறேன்!

கூந்தல் வாசம் நுகர்ந்தபடி
உன்னோடு பொழுதை கழிக்க
தென்றல் வீச வேண்டுகிறேன்!

கடலில் கால் நனைத்தபடி
உன்னோடு விளையாடிக் கொண்டிருக்க
அலையடிக்க வேண்டுகிறேன்!

கவிதை சொல்லியபடி
உன்னோடு காலார நடக்க
பாதை நீள வேண்டுகிறேன்!

காதலித்தபடி
உன்னோடு ஆயுள் முழுதும் வாழ
நீ என் மனைவியாக
வேண்டுகிறேன்...

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

நீ வருவாய் என...
மொட்டாய் காத்திருக்கிறேன் உன்
மூச்சுக்காற்று பட்டு மலர...

விடியாமல் காத்திருக்கிறேன் உன்
முகம் பார்த்து விடிய...

பாதையாய் காத்திருக்கிறேன் உன்
பாதம் பட்டு துலங்க...

மணமாய் காத்திருக்கிறேன்
என்னை நீ நுகர...!

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

கண்ணே...
காற்றால் கலைந்து விடாத
மேகமாகி
உனக்காக காத்திருப்பேன்!

நீரால் கரைந்து விடாத
மலையாகி,
உனக்காக காத்திருப்பேன்!

காலத்தால் அழிந்துவிடாத
காவியமாகி,
உனக்காக காத்திருப்பேன்!

மரணத்தால் மறைந்துவிடாத
மா மனிதனாகி,
அடுத்த ஜென்மத்திலும்...
உனக்காகவே காத்திருப்பேன்!

Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

மாற்றம்
இயற்பியலாய் வந்து
வேதியியலாய் நுழைந்து
உயிரியலாய் என்னுள்
கலந்தவளே

என்னை விட
உயரியவனாய் ஒருவன் வந்தவுடன்
கணக்கியலாய் என்னை
கழற்றிவிட்ட
உன் உளவியல்
என்னடி பெண்ணே!


Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

காதல்!
காதல்!

நான்
என்னுள்
மறைத்து
வைத்த
காதலை
அவளே
சொன்னாள்...

என்னிடம்
அல்ல,
என்
நண்பனிடம்!


Submitted by Sathis Kumar Vijaya Baskaran on 30-Mar-2010

Pudhu Tamil Kavithaikal in Tamil

Tamil Kavithaikal in Tamil

ஐந்தாம் வகுப்பு நண்பன் - அன்புடன் மணிகண்டன்

Pudhu Tamil Kavithaikal in Tamil

நினைவுகள்

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா

நினைவுகள் - I

ENATHU KERUKKAL

எனக்கு நீ யார்...?”

என் உயிர் தோழி

Simple-poems-in-Tamil

Manoharn kavithai வாழ்க்கை கவிதை

ஒவ்வொரு இரவும்

மனதினுள் நீயும் உயிருக்குள் உன் நினைவும்

நட்பை நாம் நேசிக்கும்போது...!

இரவு நேர காதல்

kalai-ன் உண்மை ஒன்று சொல்லிடவா?

காதல் காயம்

கோவை சதீஷ் கவிதைகள்

யாவரும் நலம்

YENGGO KIDAITHAVAI

பச்சை மஞ்சள் கருப்பு தமிழன் நான்

PRADHAP KATHAL KAVITHAIKAL

காதல் யார் அவள்

Kathal thottru ponnal

Penae ne en edhyam alla

சின்ன சின்ன ஆசைகள்

NILAA

Thamarai poovaal mugam padaithavan

Enathu AMMA

படித்ததில் பிடித்தது

Kaathal oru Inbamana Thunbam

உன்னத்தான் காதலிச்சேன்

அழியா அசைவுகள்

புதிய படைப்புகள்

Tamil

Sad Love Tamil Kavithaigal

Tamil Quotes

Feelings Kavithaigal

Tamil Kavithaigal

Amma Mother

True Love

Kadhal and Natpu

Short Tamil Poems

Tamil Love and Romantic Poetry

Vaalkai Thathuvam

Kavithai Collection

Kavithai Mazhai

Pudhu Tamil Kavithaigal

Kadhal

MY SWEETY

Tamil Kavithaikal in Tamil

Kavithaigal

Pennin Kadhal

Latest Tamil Poems

Kadhal Tholvi

Ean Intha Matram

Kadhalin Thunbam

Ennaval

Kathal Infactuation

Sad Kadhal Kavithaigal

Kavithaigal and Romantic Poems

Muthal Muththam (First Kiss) Tamil Kavithai

Funny C Plus Plus Program Written in Tamil

சிவபெருமான்

காதலுடன் கலை

Categories

English SMS And Text Messages

Fun Pages

God Murugan

Hindi SMS

Jokes

Tamil

Tamil Jokes

Tamil SMS

Telugu Jokes And SMS